சிவகங்கை, டிச.23: சிவகங்கை அருகே குமாரபட்டியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பயிர் நோயியல் துறை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டம் உப்பாறு உபவடி பகுதி வெளிவளாக பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு பேராசிரியர் ரேவதி தலைமை வகித்தார். இதனை தொடர்ந்து நீரினை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு பேராசிரியர் ரேவதி விரிவாக எடுத்துக் கூறினார். இக்கருத்தரங்கில் குமாரபட்டி, காராம்போடை கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பேராசிரியருடன் நோய்கள் குறித்து கலந்துரையாடி பயன்பெற்றனர்.
The post விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.